தூத்துக்குடி மாவட்டம், தெற்கு காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராகப் பணிபுரிந்து வருபவர் இசக்கிராஜா. இவர் திருநெல்வேலி மாவட்ட நீதிமன்றத்தில் பணிபுரிந்து வரும் வழக்கறிஞர் இசக்கி பாண்டியை தொடர்புகொண்டு, கொலை வழக்கில் தொடர்புடைய குற்றவாளி ஒருவரை தன்னிடம் ஒப்படைக்குமாறு மிரட்டியதாகக் கூறப்படுகிறது,
ஆனால், இசக்கி பாண்டி அந்த குற்றவாளியை உதவி ஆய்வாளரிடம் ஒப்படைக்காமல் நேரடியாக நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி உள்ளார். இதனால், ஆத்திரமடைந்த உதவி ஆய்வாளர் இசக்கி ராஜா, நேற்று (செப்.8) திருநெல்வேலி நீதிமன்றத்திற்கு வெளியே வழக்கறிஞர் இசக்கி பாண்டியை கார் ஏற்றிக்கொலை செய்ய முயன்றதாகவும், துப்பாக்கியைக் காட்டி மிரட்டியதாகவும் கூறப்படுகிறது.