தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / briefs

பெரம்பலூரில் பலத்த மழை விசுவக்குடி அணையில் நீர்வரத்து அதிகரிப்பு! - பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

பெரம்பலூர்: மாவட்டத்தில் நேற்று இரவு பலத்த மழை பெய்ததால் விசுவக்குடி அணையில் நீர்வரத்து அதிகரித்துள்ளது.

பெரம்பலூரில் பலத்த மழை
பெரம்பலூரில் பலத்த மழை

By

Published : Sep 10, 2020, 3:08 PM IST

பெரம்பலூர் மாவட்டத்தில் கடந்த ஒரு வார காலமாக பரவலாக மழை பெய்து வருகிறது. இதனிடையே நேற்று செப்டம்பர் 9 இரவு மாவட்டம் முழுவதும் நல்ல மழை பெய்துள்ளது.

அந்தவகையில், செட்டிகுளம் 8 மில்லி மீட்டர், பாடாலூர் 13 மில்லி மீட்டர், அகரம் சீகூர் 84 மில்லிமீட்டர், லப்பைகுடிகாடு 35 மில்லி மீட்டர், புதுவேட்டக்குடி 23 மில்லி மீட்டர், பெரம்பலூர் 13 மில்லி மீட்டர், இறையூர் 62 மில்லிமீட்டர், கிருஷ்ணாபுரம் 50 மில்லி மீட்டர், தழுதாழை 37 மில்லி மீட்டர், விகளத்தூர் 6 மில்லி மீட்டர், வேப்பந்தட்டை 59 மில்லி மீட்டர் என மொத்தம் 390 மில்லிமீட்டர் மழை மாவட்டத்தில் பெய்துள்ளது.

மேலும் சராசரியாக 35.45 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது. மாவட்டத்தில் பல்வேறு ஏரிகள் குளங்களில் நீர் வரத்து அதிகரித்துள்ளது. வேப்பந்தட்டை வட்டம் கிருஷ்ணாபுரம் ஏரிகள் குளங்களில் நீர் வரத்து அதிகரித்துள்ளது. வேப்பந்தட்டை வட்டம் விஸ்வகுடி நீர்த்தேக்கத்தில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. தற்போதும் தொடர்ந்து பெய்து வரும் மழையால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

ABOUT THE AUTHOR

...view details