ஈரோடு மாவட்டத்தில் கடந்த சில நாள்களாக கரோனா பாதிப்பு அதிகரித்துவருகிறது. இதனை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
இந்நிலையில், ஈரோடு மாநகராட்சி பகுதியில் கரோனா பாதிக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்ட பகுதியான ராஜாஜிபுரம் பகுதியில் மாவட்ட ஆட்சியர் கதிரவன், மாநகராட்சி ஆணையர் இளங்கோவன் ஆகியோர் அரசு துறை அலுவலர்களுடன் ஆய்வு செய்தனர்.
பின்னர் மாவட்ட ஆட்சியர் கதிரவன் செய்தியாளர்களிடம் பேசுகையில், "கரோனா பரவலை கட்டுப்படுத்த மாவட்டம் முழுவதும் 26 இடங்கள் தனிமைபடுத்தப்பட்டுள்ளன. அவர்களுக்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் மாவட்ட நிர்வாகம் செய்து வருகிறது. மாவட்டம் முழுவதும் 4000-க்கும் மேற்பட்டோர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.