திருவள்ளூரை அடுத்த ஈக்காடு ஊராட்சியில் கடந்த மார்ச் மாதம் இந்தியன் சர்க்கஸ் என்ற பெயரில் சர்க்கஸ் காட்சிகள் தொடங்கப்பட்டன. ஒரு வாரம் மட்டுமே நடைபெற்ற இந்த சர்க்கஸ் காட்சி ஊரடங்கு உத்தரவால் நிறுத்தப்பட்டது.
இதைத் தொடர்ந்து பல மாதங்களாக அந்த சர்க்கஸ் குழுமத்தில் உள்ள 60 கலைஞர்கள் இரண்டு ஒட்டகம், மூன்று குதிரைகள், நாய்கள் ஆகியவற்றை பராமரிப்பது மிகவும் சிரமமாக இருந்தது. மேலும், சர்க்கஸ் கலைஞர்கள் வாழ வழியின்றி பட்டினியால் வாடுவதாக மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி ரவிக்குமாருக்கு தகவல் கிடைத்தது.