கரோனா நோய் பரவல் காரணமாக இந்தாண்டு மார்ச் மாதம் நடைபெறவிருந்த பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு ஒத்திவைக்கப்பட்டு வரும் ஜூன் 15 முதல் 25 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. மேலும் விடுபட்ட 11ஆம் வகுப்பு தேர்வும் 16 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்காக தேர்வு மையங்கள் தயார் செய்யும் பணிகள் மற்றும் ஹால் டிக்கெட் வழங்கும் பணிகள் நடைபெற்றுவருகின்றன.
இதனைத் தொடர்ந்து வெளியூர் மாணவர்களும், அவர்கள் படித்த ஊர்களுக்கு செல்லத் தொடங்கியுள்ளனர். இந்நிலையில் வெளியூரில் தங்கி 10, 11ஆம் வகுப்பு பயின்று வந்த தேனி மாவட்டத்தைச் சேர்ந்த பார்வை குறைபாடு மற்றும் செவித்திறன் இழந்த மாற்றுத்திறனாளி மாணவர்களை அவர்கள் தேர்வு எழுத உள்ள பகுதிகளுக்கு மாவட்ட ஆட்சியர் அனுப்பிவைத்தார்.