ஈரோடு எஸ்கேசி சாலை, அதியமான் வீதியைச் சேர்ந்த காதர்-சரிபா பேகம் தம்பதியரின் இரட்டைக் குழந்தைகள் திருணாஸ் அலி, பஷிகா நிஷா. 16 வயதான இந்தக் குழந்தைகள் இருவருமே மாற்றுத்திறனாளிகள்.
இவர்கள், 2018ஆம் ஆண்டு ஈரோடு புத்தகத் திருவிழாவிற்குச் சென்றபோது, அங்கு வழங்கப்பட்ட இரண்டு உண்டியல்களில் பணத்தை சேமித்து வந்துள்ளனர். இந்நிலையில் புத்தகம் வாங்கும் நோக்கத்தில் சேமிக்கப்பட்ட பணத்தை, கரோனா நிவாரண நிதியாக ஈரோடு மாவட்ட ஆட்சியர் கதிரவனை சந்தித்து வழங்கியுள்ளனர்.