தேனி மாவட்டத்தில் கரோனா வைரஸ் (தீநுண்மி) நோய்ப்பரவல் நாளுக்கு நாள் அதிகரித்துவருகின்றது. இவற்றில் பெரியகுளம், அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில்தான் பாதிப்பு அதிகம் உள்ளது.
இந்நிலையில் பெரியகுளம் தென்கரை தெற்குத் தெருவைச் சேர்ந்த கார் ஓட்டுநருக்கு கடந்த சில நாள்களுக்கு முன் கரோனா நோய்த்தொற்று கண்டறியப்பட்டது. இவர் தேனி ஆவின் தலைவரும், துணை முதலமைச்சர் ஓபிஎஸ்-யின் சகோதரருமான ஓ.ராஜாவிடம் கார் ஓட்டுநராகப் பணிபுரிந்துவந்தது தெரியவந்தது.
இதனையடுத்து கார் ஓட்டுநருக்கு நோய்த்தொற்று உறுதிசெய்யப்பட்டதால், ஓ. ராஜா அவரது உறவினர்கள், கார் ஓட்டுநருடன் நெருங்கிய தொடர்பில் இருந்தவர்களுக்கும் பரிசோதனை செய்யப்பட்டது.