தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / briefs

ஆனந்தக் கண்ணீருடன் விடைபெற்ற டேவிட் ஃபெரர்! - Spain

சர்வதேச டென்னிஸ் போட்டிகளில் இருந்து ஸ்பெயின் வீரர்டேவிட் ஃபெரர் ஓய்வு பெற்றார்.

டென்னிஸ் போட்டியில் இருந்து விடை பெற்றார் டேவிட் ஃபெரேரர்!

By

Published : May 10, 2019, 9:56 AM IST

2019ஆம் ஆண்டுக்கான மாட்ரிட் ஓபன் டென்னிஸ் தொடர் ஸ்பென் தலைநகர் மாட்ரிட்டில் நடைபெற்று வருகிறது. இந்தத் தொடருடன், தான் டென்னிஸ் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறப்போவதாக ஸ்பெயின் நாட்டின் நட்சத்திர வீரர் டேவிட் ஃபெரர் அறிவித்திருந்தார்.

இதனால், அவரது ஆட்டத்தைக் காண ரசிகர்கள் மைதானத்தில் அதிகளவில் திரண்டனர். இதையடுத்து, தனது முதல் சுற்றுப் போட்டியில் சக நாட்டு வீரர் பவ்டிஸ்டா அகட்டை வீழ்த்தியதன் மூலம், இரண்டாம் சுற்றுக்கு முன்னேறினார்.

இந்நிலையில், நேற்று நடைபெற்ற ஆடவர் ஒற்றையர் பிரிவு இரண்டாம் சுற்றுப் போட்டியில் டேவிட் ஃபெரர், ஜெர்மனியின் ஆண்ட்ரூ ஸ்வெரவை எதிர்கொண்டார். இதில், டேவிட் ஃபெரர் 6-4, 6-1 என்ற செட் கணக்கில் தோல்வி அடைந்தார். இதனால் தொடரிலிருந்து வெளியேறிய அவர் சர்வதேச டென்னிஸ் தொடர்களில் இருந்து ஓய்வு பெற்றார்.

டென்னிஸ் போட்டியில் இருந்து விடை பெற்றார் டேவிட் ஃபெரேரர்!

சொந்த மண்ணில் கடைசி டென்னிஸ் தொடரில் விளையாடியது தனக்கு மகிழ்ச்சி அளித்ததாகக் கூறி அவர் கண்ணீர் மல்க விடை பெற்றார். இதைத்தவிர, தனக்கு இதுவரை ஆதரவு தந்த ரசிகர்களுக்கு நன்றியைத் தெரிவித்தார். ரசிகர்களும் டேவிட் ஃபெரருக்கு எழுந்து நின்று தந்து கௌரவித்தனர்.

இவரது ஆடிய கடைசிப் போட்டிக்கு முன்னதாக நடைபெற்ற விழாவில் நட்சத்திர டென்னிஸ் வீரர்களான ஜோகோவிச், ஃபெடரர், நடால், டாம்னிக் தீம் உள்ளிட்டோர் கலந்துகொண்டு அவருக்கு பிரியாவிடை கொடுத்தனர்.

ABOUT THE AUTHOR

...view details