உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக, இந்தியா முழுவதும் கரோனா வைரஸ் பாதிப்பின் அச்சுறுத்தல் அதிகரித்து வரும் நிலையில் மத்திய, மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றன.
பெரும்பொருளாதார நெருக்கடிக்குள் சிக்கித் தவிக்கும் மத்திய அரசும், தமிழ்நாடு அரசும் பொதுமக்கள் தங்களால் ஆன நிதியை கரோனா நிவாரணத்திற்காக வழங்க முன்வரவேண்டும் என வேண்டுகோள் விடுத்திருந்தன. இதையடுத்து, பல்வேறு கட்சிகளும், நிறுவனங்களும், தன்னார்வலர்களும் தங்களால் இயன்ற நிதியை வழங்கி வருகின்றனர்.