புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் வர்த்தக சங்க பிரதிநிதிகளுடன் கரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த ஆலோசனை கூட்டம் மாவட்ட ஆட்சியர் உமாமகேஸ்வரி தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் சரவணன், நகராட்சி ஆணையர் ஜீவா சுப்பிரமணியம் ஆகியோர் பங்கேற்றனர். இந்தக் கூட்டத்தில் வர்த்தக காய்கனி வியாபாரிகள் சங்கம், நகைக்கடை உரிமையாளர்கள் சங்கம் உள்ளிட்ட பல்வேறு வணிக சங்க பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
கூட்டத்திற்குப் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த மாவட்ட ஆட்சியர் உமா மகேஸ்வரி, “புதுக்கோட்டை மாவட்டத்தில் தற்போது கரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. கரோனா பாதிப்பு உள்ள மாவட்டங்களில் இருந்து வரும் நபர்கள் மூலம் தான் தொற்று ஏற்பட்டு வருகிறது.
அதனைக் கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் அனைத்து விதமான நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறது. மாவட்டம் முழுவதும் 13 சோதனைச்சாவடிகள் அமைக்கப்பட்டு வெளி மாவட்டங்களிலிருந்து வரும் நபர்கள் பரிசோதனைக்கு பின்பு மாவட்டத்திற்குள் அனுமதிக்கப்படுகின்றனர்.