தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / briefs

புதுக்கோட்டையில் 3 ஆயிரத்தை நெருங்கும் கரோனா பாதிப்பு! - Pudukottai Corona Deaths

புதுக்கோட்டை: கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் ‌3 ஆயிரத்தை நெருங்கவுள்ள நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 36 ஆக உயர்ந்துள்ளது.

Corona positive cases closing 3,000 in Pudukkottai
Corona positive cases closing 3,000 in Pudukkottai

By

Published : Aug 7, 2020, 10:40 PM IST

கரோனா தொற்று நாடு முழுவதும் பெரிய அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. அதன் ஒரு பகுதியாக புதுக்கோட்டை மாவட்டத்தில் ஒரு மாதத்திற்கு முன்பு வரை கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை வெகு குறைவாக இருந்த நிலையில், தற்போது கிடுகிடுவென உயர்ந்து கடந்த வாரம் 2 ஆயிரத்து 100-ஐ தாண்டியுள்ளது.

இந்நிலையில், இன்று மட்டும் 173 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை 2 ஆயிரத்து 928 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் 36 பேர் உயிரிழந்துள்ளனர்.

அதேபோல், ஆயிரத்து 955 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மீதமுள்ள 937 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தற்போது புதுக்கோட்டை மாவட்டத்தில் கரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 3 ஆயிரத்தை நெருங்க உள்ளது. இதன் காரணமாக, மாவட்டம் முழுவதும் கிருமி நாசினி தெளிப்பது போன்ற பாதுகாப்பு பணிகளும் நகராட்சி சார்பில் நடைபெற்று வருகிறது.

ABOUT THE AUTHOR

...view details