தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / briefs

மீண்டும் மருத்துவமனையிலிருந்து தப்பிய கரோனா நோயாளி - villupuram district news

விழுப்புரம்: அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலிருந்து கரோனா தொற்று பாதித்த நபர் தப்பி சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மீண்டும் மருத்துவமனையிலிருந்து தப்பிய கரோனா நோயாளி

By

Published : Jul 7, 2020, 8:21 PM IST

விழுப்புரம் மாவட்டம் வானூர் அருகேயுள்ள தென்கோடிபாக்கம் பகுதியை சேர்ந்தவர் கோவிந்தன் (43). இவருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து, கடந்த மாதம் 25ஆம் தேதி விழுப்புரம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

தொடர்ந்து சிகிச்சை பெற்றுவந்த இவர் நேற்று மருத்துவமனையில் இருந்து திடீரென காணாமல் போனார். இதையடுத்து காவல் துறையினர் நடத்திய தேடுதல் வேட்டையில், அந்த நபர் தென்கோடிபாக்கத்தில் உள்ள அவரது வீட்டில் இருப்பது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து கிளியனூர் காவல் துறையினர் அவரை மீண்டும் மருத்துவமனைக்கு அழைத்து வந்தனர்.

மேலும் அவரது வீட்டில் இருந்தவர்களும் தனிமைப்படுத்தப்பட்டனர். பின்னர் கோவிந்தனிடம் நடத்திய விசாரணையில், தனது குழந்தைகளை பார்ப்பதற்காக வீட்டுக்கு சென்றதாக தெரிவித்தார்.

இதற்கிடையில் கோவிந்தன் இன்று மீண்டும் விழுப்புரம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையிலிருந்து தப்பியுள்ளார். இதையடுத்து, தப்பியோடிய நபரை காவல் மற்றும் சுகாதாரத் துறை அலுவலர்கள் தீவிரமாக தேடி வருகின்றனர். இந்த சம்பவம் விழுப்புரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details