தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / briefs

விருதுநகரில் சுகாதார ஆய்வாளர் இருவருக்கு கரோனா உறுதி! - Corona Affected Two Health Inspector

விருதுநகர்: சுகாதார ஆய்வாளர் இருவருக்கு கரோனா உறுதி செய்யப்பட்ட நிலையில் அவர்களுடன் தொடர்பிலிருந்த மேலும் நான்கு பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

Corona Affected Two Health Inspector In Virudhunagar
Corona Affected Two Health Inspector In Virudhunagar

By

Published : Jun 18, 2020, 7:07 AM IST

விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் நகராட்சி அலுவலகத்தில் சுகாதார ஆய்வாளராக பணிபுரிந்து வரும் இருவர் மற்றும் நகராட்சி ஊழியர்கள் சுகாதாரப் பணி செய்ய சென்னை சென்றுள்ளனர்.

அங்கு 20 நாள்கள் பணி செய்துவிட்டு வீடு திரும்பினர். இந்நிலையில் அவர்களுக்கு கரோனா பரிசோதனை நடந்தது. இதில் அவர்கள் இருவருக்கும் கரோனா பாதிப்பு இருப்பது தெரியவந்துள்ளது.

இதையடுத்து அவர்கள் இருவரும் விருதுநகரில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களை சந்தித்த மேலும் நான்கு தூய்மைப் பணியாளர்களுக்கும் கரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

இது அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க:'அரசு மருத்துவமனையில் தனி அறை வேண்டும்' - அடம்பிடிக்கும் ரவுடி பேபி சூர்யா!

ABOUT THE AUTHOR

...view details