திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அடுத்த 350 ஏக்கர் பரப்பளவு கொண்ட கரியமங்கலம் ஏரியை நம்பி சுமார் 10 ஆயிரம் ஏக்கர் விளை நிலங்கள் உள்ளன.
இங்கு கடந்த சில வருடங்களாக மழை பெய்யாததால் நீர்வரத்தின்றி இந்த ஏரி வறண்டு, விவசாயம் பாதிக்கப்பட்ட நிலையில், இனிவரும் பருவ மழையைத் தேக்கி வைத்து விவசாயம் செய்ய உதவக்கோரி மாவட்ட ஆட்சியரிடம் விவசாயிகள் கோரிக்கை வைத்தனர்.
இதைத் தொடர்ந்து, கரியமங்கலம் ஏரியை தூர் வாரி கரையை பலப்படுத்த, சுமார் 98 லட்சம் ரூபாய் மதிப்புள்ள ஒப்பந்தம் ஏலம் விடப்பட்டு, அதற்கான பணிகளை அரசு ஒப்பந்ததாரர் சங்கர் மாதவன் என்பவர் மேற்கொண்டு வருகிறார்.