தூத்துக்குடி திரேஸ்புரம் பகுதியைச் சேர்ந்தவர் கணேசன். மீனவரான இவர், அரசு அளித்த மானியத்தை முதலீடாக கொண்டு புதிதாக மீன்பிடி படகு ஒன்றை சமீபத்தில் கட்டினார். இந்த படகில் தருவைக்குளத்தைச் சேர்ந்த படகு ஓட்டுநர் ராபின் உள்பட திரேஸ்புரம், தருவைக்குளத்தைச் சேர்ந்த 14 மீனவர்கள் கடந்த ஜூலை 29ஆம் தேதி ஆழ்கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனர்.
அப்போது, நாகப்பட்டினத்தையொட்டி ஆழ்கடல் பகுதியில் சூரை மீன்கள் அதிகளவில் இருப்பதாக கிடைக்கப்பெற்ற தகவலை தொடர்ந்து அவர்கள் நாகப்பட்டினம் நோக்கி சென்றனர். அப்போது ஆழ்கடலில் சென்று கொண்டிருந்தபோது படகில் திடீரென பழுது ஏற்பட்டது.
இதையடுத்து படகு நீரோட்ட வழியில் தத்தளித்துக் கொண்டிருந்தது. இதைப்பார்த்த அவ்வழியே வந்த இரண்டு சிறிய படகில் வந்த மீனவர்கள் பழுதாகி தண்ணீரில் தத்தளித்துக் கொண்டிருந்த படகினை இழுக்க முயற்சி செய்தனர். ஆனால் படகினை மீட்க முடியவில்லை.