தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / briefs

குடியிருப்புப் பகுதிக்குள் சுற்றித்திரியும் காட்டெருமை: பொதுமக்கள் அச்சம் - இன்றைய நீலகிரி செய்திகள்

நீலகிரி: குடியிருப்புப் பகுதியில் சுற்றித் திரியும் ஒற்றை காட்டெருமையை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கைவிடுத்துள்ளனர்.

Bison around the residential area
Bison around the residential area

By

Published : Jun 19, 2020, 11:08 AM IST

Updated : Jun 19, 2020, 11:55 AM IST

நீலகிரி மாவட்டம் குன்னூர் பகுதியில் நடமாடும் காட்டெருமைகளின் எண்ணிக்கை சமீபகாலமாக அதிகரித்து காணப்படுகிறது. குறிப்பாக குடியிருப்பு, தேயிலை தோட்டங்களில் சர்வசாதாரணமாக உலவிவருவதோடு மட்டுமல்லாமல் ஏராளமானவர்களைத் தாக்கி உயிரிழப்பும் நேர்ந்துள்ளது.

இதனால் காட்டெருமைகளைக் கண்டாலே மக்கள் அச்சமடைந்து ஓட்டம்பிடித்து-வருகின்றனர். இந்நிலையில் வனப் பகுதியில் போதிய உணவு, தண்ணீர் இல்லாமல் குன்னூர் அருகே உள்ள கிருஷ்ணபுரம் பகுதியில் ஒற்றை காட்டெருமை பகல் நேரங்களிலேயே குடியிருப்புப் பகுதிக்குள் வலம்வருகிறது.

இதன் காரணமாக அப்பகுதி மக்கள் மிகுந்த அச்சத்தில் உள்ளனர். இது குறித்து வனத் துறைக்குப் பலமுறை தகவல் தெரிவித்தும் இதுவரை வனத் துறையினர் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் உள்ளனர்.

மேலும் உயிர்பலி ஏற்படும் முன் உடனடியாக குடியிருப்புப் பகுதியில் சுற்றித் திரியும் ஒற்றை காட்டெருமையை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கைவிடுத்துள்ளனர்.

Last Updated : Jun 19, 2020, 11:55 AM IST

ABOUT THE AUTHOR

...view details