தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / briefs

குடும்ப பிரச்னையால் உதவி ஆய்வாளர் தற்கொலை - சென்னை மாவட்ட செய்திகள்

சென்னை: கீழ்ப்பாக்கத்தில் உள்ள காவலர் வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் உதவி ஆய்வாளர் ஒருவர், குடும்ப பிரச்னையால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

சென்னையில் குடும்ப பிரச்சினையால் உதவி ஆய்வாளர் தற்கொலை
சென்னையில் குடும்ப பிரச்சினையால் உதவி ஆய்வாளர் தற்கொலை

By

Published : Sep 16, 2020, 6:38 PM IST

சென்னையில் பீர்க்கன்காரணை காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராக பணியாற்றி வந்தவர் நரசிம்ம மூர்த்தி (56). இவர் மனைவி, மகளுடன் கீழ்ப்பாக்கம் காவலர் வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் வசித்து வந்தார். இவருடைய மகளுக்கு திருமணம் ஆனதால், நரசிம்ம மூர்த்தி அயப்பாக்கத்தில் உள்ள தனது சொந்த வீட்டில் மனைவியுடன் தங்கி வந்தார்.

இந்நிலையில், அவருக்கு சிறுநீரக கோளாறு பிரச்னை இருந்ததால் அதற்கான சிகிச்சை பெற்று வந்தார். மது அருந்தக்கூடாது என மருத்துவர்கள் அறிவுறுத்தியும் நரசிம்ம மூர்த்தி மது அருந்தியதாக கூறப்படுகிறது. இதனால் அவரது குடும்பத்தில் பிரச்னை ஏற்பட்டுள்ளது.

இதனால் கீழ்ப்பாக்கம் காவலர் குடியிருப்புக்கு வந்த நரசிம்ம மூர்த்தி, மனைவிக்கு செல்போன் மூலம் தற்கொலை செய்யப்போவதாக தெரிவித்து விட்டு மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இது குறித்து தகவலறிந்து வந்த காவல்துறையினர் அவரின் உடலைக் கைப்பற்றிய உடற்கூறாய்வுக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், நரசிம்ம மூர்த்தியின் செல்போனை கைப்பற்றி தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ABOUT THE AUTHOR

...view details