தமிழ்நாடு

tamil nadu

By

Published : Jun 14, 2020, 1:07 AM IST

ETV Bharat / briefs

மகாபாரத கதையில் ஆமிர் கானுடன் இணையும் பாகுபலி பிரபலம்!

மகாபாரதத்தை திரைப்படமாக எடுக்க ஆமிர் கான் மற்றும் பாகுபலி கதாசிரியர் விஜயேந்திர பிரசாத் ஆகியோர் முயன்று வருகின்றனர்.

ஆமிர் கான்
ஆமிர் கான்

நடிகர் ஆமிர் கானுக்கு நீண்ட நாட்களாக மகாபாரதத்தில் நாயகனாக நடிக்க வேண்டும் என்று ஆசை இருப்பதாக பலமுறை தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் தற்போது அதற்கான முதற்கட்ட பணிகளை, ராஜமௌலியின் தந்தையும், பாகுபலி கதாசிரியருமான விஜயேந்திர பிரசாத் தொடங்கியுள்ளார்.

இதுகுறித்து விஜயேந்திர பிரசாத் சமீபத்தில் பிரபல செய்தி நிறுவனத்திற்கு பேட்டி அளித்துள்ளார்.

அவர் கூறியதாவது, "மகாபாரதத்தை திரைப்படமாக எடுக்க நானும், ஆமிர் கானும் தற்போது பேசிக் கொண்டிருக்கிறோம். முதற்கட்டப் பணிகள் தொடங்கியுள்ளது.

எனக்கு எழுதுவது மிகவும் பிடிக்கும். அதனால் இந்த லாக்டோன் காலத்தில் நிறைய படங்களின் கதைகளை எழுதி வைத்துள்ளேன். அதற்குமேல் தற்போது எந்த தகவலையும் வெளியிட முடியாது" என்றார்.

ABOUT THE AUTHOR

...view details