தமிழ்நாடு

tamil nadu

இருசக்கர வாகனம் மீது லாரி மோதி விபத்து - ஒருவர் உயிரிழப்பு

கன்னியாகுமரி: இருசக்கர வாகனத்தின் மீது லாரி மோதிய விபத்தில் ஒருவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

By

Published : Jun 8, 2020, 11:10 PM IST

Published : Jun 8, 2020, 11:10 PM IST

A Man Died Two wheeler Accident In Kanniyakumari
A Man Died Two wheeler Accident In Kanniyakumari

கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் அருகேயுள்ள கோதை கிராமத்தைச் சேர்ந்தவர் மனோஜ் (எ) மனோகரன் (30). இவர் நாகர்கோவிலில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வந்தார்.

இந்நிலையில், வெளியே சென்றிருந்த மனோஜ், இன்று மதியம் தனது இருசக்கர வாகனத்தில் வீட்டிற்குச் சென்று கொண்டிருந்தார். அப்போது, கிருஷ்ணன்கோவில் அருகே வந்துகொண்டிருந்தபோது அந்த வழியாக சென்ற லாரி ஒன்று மனோஜின் இருசக்கர வாகனத்தின் மீது மோதியது.

இதில், படுகாயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

பின்னர், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த நாகர்கோவில் போக்குவரத்து காவல் துறையினர் மனோஜின் உடலைக் கைப்பற்றி உடற்கூறாய்விற்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், காவல் துறையினர் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ABOUT THE AUTHOR

...view details