தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / briefs

சிறுமிக்கு காதல் கடிதம் கொடுத்த முதியவர் போக்சோவில் கைது! - சிறுமிக்கு காதல் கடிதம் கொடுத்த முதியவர்

கோயம்புத்தூர்: போத்தனூர் அறுகே 16 வயது சிறுமிக்கு காதல் கடிதம் கொடுத்து துன்புறுத்திய முதியவரை காவல் துறையினர் போக்சோவில் கைதுசெய்தனர்.

66 years old man arrested in coimbatore
Old man arrested

By

Published : Jun 24, 2020, 1:53 PM IST

கோயம்புத்தூர் போத்தனூர் பகுதியைச் சேர்ந்தவர் முகமது பீர் பாஷா(66). இவர் அதேப் பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுமியிடம் "எனக்கு உன்னை பிடித்திருக்கு உனக்கு ஓகே வா" என்று காதல் கடிதம் எழுதி கொடுத்துள்ளார்.

இது குறித்து சிறுமியின் பெற்றோருக்கு தெரியவரவே அவர்கள் முதியவரை கண்டித்துள்ளனர்.

ஆனால், அந்த முதியவர் மீண்டும் சிறுமியிடம் காதல் கண்ணோட்டத்தில் வம்பிழுத்துள்ளார். இது குறித்து மீண்டும் அந்தச் சிறுமி தனது வீட்டாரிடம் தெரிவித்தார்.

இதனால் அதிர்ச்சியடைந்த சிறுமியின் பெற்றோர் கோவை ராமநாதபுரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இந்தப் புகாரின் பேரில் காவலர்கள் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.

இதையடுத்து கைது செய்யப்பட்ட முதியவர் முகமது பீர் பாஷா சிறையில் அடைக்கப்பட்டார்.

இதையும் படிங்க: குழந்தையை தரையில் அடித்துக் கொன்ற தந்தை கைது!

ABOUT THE AUTHOR

...view details