தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / briefs

பூந்தமல்லி அருகே பப்ஜி விளையாட்டு தகராறில் ஒருவருக்கு கத்திக்குத்து; 4 பேர் கைது - வெள்ளவேடு போலீசார்

பூந்தமல்லி அருகே பப்ஜி கேம் விளையாடிய 2 நண்பர்களுக்கு இடையே ஏற்பட்ட தகராறில் ஒருவர் கத்தியால் குத்தப்பட்டார். இதுதொடரப்க 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

4 பேர் கைது
4 பேர் கைது

By

Published : Jun 16, 2022, 10:46 AM IST

திருவள்ளூர்:பூந்தமல்லி திருமழிசை அடுத்த கூடப்பாக்கத்திலுள்ள தமிழ்நாடு குடிசை மாற்று வாரிய குடியிருப்பு பகுதியைச் சேர்ந்தவர் அஜித்குமார். இவர் அவருடைய நண்பர் சசிகுமார் வீட்டின் அருகே அவருடன் பப்ஜி கேம் விளையாடி உள்ளார்.

அப்போது அஜித் குமார், சசிகுமார் ஆகிய இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால், ஆத்திரமடைந்த அஜித் குமார் தனது சகோதரர்களை வரவழைத்து சசிகுமாரை கத்தியால் குத்தியுள்ளார்.

இந்த விவகாரத்தில் செல்வம் சாமுவேல் அபிலேஷ் விஜயகுமார் 4 பேரை வெள்ளவேடு போலீசார் கைது செய்தனர். அஜித்குமார், சசிகுமார் திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதையும் படிங்க: கொலை வழக்கு - டெல்லி திகார் சிறைக்கைதி நாகர்கோவில் நீதிமன்றத்தில் ஆஜர்

ABOUT THE AUTHOR

...view details