தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / briefs

கரோனா பாதிப்பு: கடலூரில் 16 பேர் அட்மிட்,16 பேர் டிஸ்சார்ஜ்! - கடலூரில் 16 பேருக்கு கரோனா தொற்று உறுதி

கடலூர்: கரோனா தொற்றால் ஒரே நாளில் 16 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், 16 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

கரோனா பாதிப்பு: கடலூரில் 16 பேர் அட்மிட்,16பேர் டிஸ்சார்ஜ்!
Cuddalore corona cases

By

Published : Jul 13, 2020, 9:56 AM IST

கடலூரில் நேற்று முன்தினம் (ஜூலை11)வரை கரோனா தொற்றால் ஆயிரத்து 505 பேர் பாதிக்கப்பட்டிருந்தனர்.
இந்நிலையில் நேற்று மேலும் 16 பேருக்கு கரோனா தொற்றிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை ஆயிரத்து 521 ஆக உயர்ந்துள்ளது.

பாதிக்கப்பட்ட அனைவரையும் கடலூர், விருத்தாச்சலம், சிதம்பரம் உள்ளிட்ட அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது.

இதனால் கடலூர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை 1077 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர்.

இந்நிலையில் நேற்று மேலும் 16 பேர் சிகிச்சை பெற்று குணம் அடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் கடலூர் மாவட்டத்தில் சிகிச்சை முடிந்து 1093 பேர் டிஸ்சார்ஜ் ஆகி உள்ளனர்.

இதுவரை, கடலூர் மாவட்டத்தில் சிகிச்சை பலனின்றி 12 பேர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: திருப்போரூர் திமுக எம்.எல்.ஏ., புழல் சிறையில் அடைப்பு!

ABOUT THE AUTHOR

...view details