தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / breaking-news

விமான நிலைய காவலருக்கு கரோனா - Chennai district news

சென்னை: விமான நிலையத்தில் பணியாற்றிவந்த காவலருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது.

Corona
Corona

By

Published : Jun 10, 2020, 9:20 AM IST

கரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்துவரும் நிலையில், சென்னையில் பன்னாட்டு விமான சேவை ரத்துசெய்யப்பட்டுள்ளது.

இதனையடுத்து, வெளிநாட்டில் சிக்கித் தவிக்கும் தமிழர்களை சிறப்பு விமானம் மூலம் மீட்டுக் கொண்டுவர மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவருகிறது.

வெளிநாட்டிலிருந்து விமான நிலையத்திற்கு வரும் பயணிகள் 14 நாள்கள் தனிமைப்படுத்தப்பட்டுவருகின்றனர். அவர்களைத் தனிமைப்படுத்துவதற்காகப் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுவந்த காவவர் ஒருவருக்கு கரோனா அறிகுறிகள் தென்பட்டதால் மருத்துவப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

பின்னர், அவருக்கு கரோனா இருப்பது உறுதிசெய்யப்பட்டது. இதையடுத்து தற்போது அவருக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது.

இந்நிலையில், பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த மற்றொரு காவலருக்கு கரோனா அறிகுறிகள் தென்பட்டன. அவருக்கும் கரோனா பரிசோதனை செய்யப்பட்டது. பரிசோதனையில் தொற்று உறுதிசெய்யப்பட்டது.

இதையடுத்து குரோம்பேட்டை அரசு பொது மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details