தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

'உத்கர்ஷா மேரி மீ': பேனர் வைத்து காதலை வெளிப்படுத்திய இளைஞர்! - மகாராஷ்டிராவில் சுவாரஸ்ய நிகழ்வு

மகாராஷ்டிராவில் இளைஞர் ஒருவர் நெடுஞ்சாலை ஓரத்தில் பெரிய பேனர் வைத்து தன் காதலை பெண்ணிடம் வெளிப்படுத்திய நிகழ்வு சுவாரஸ்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

இளைஞர்!
இளைஞர்!

By

Published : May 19, 2022, 10:28 PM IST

மகாராஷ்டிரா: மகாராஷ்டிரா மாநிலம், கோல்ஹாபூரைச் சேர்ந்தவர், சௌரப் கஸ்பேகர். இவரும் சாங்லி பகுதியைச் சேர்ந்த உத்கர்ஷா என்ற பெண்ணும் ஒரே பொறியியல் கல்லூரியில் படித்து வந்துள்ளனர். இந்தநிலையில், சௌரப் கஸ்பேகர் வீட்டில் திருமணம் குறித்து பேசியுள்ளனர். அப்போது அவர் உத்கர்ஷா குறித்து தெரிவித்துள்ளார்.

பேனர் வைத்து காதலை வெளிப்படுத்திய இளைஞர்

பெற்றோர் சம்மதம் தெரிவித்ததையடுத்து, சௌரப் கஸ்பேகர் உத்கர்ஷாவிடம் தன் காதலை புதுமையாக சொல்ல வேண்டும் என்று விரும்பியுள்ளார். இதையடுத்து, சாங்லி-கோலாப்பூர் நெடுஞ்சாலையில் 50 x 25 அளவு பேனரில் 'உத்கர்ஷா மேரி மீ - சௌரப்' என்ற வாசகத்துடன் பேனர் வைத்துள்ளளார். இந்த பேனர் முன் சௌரப் உத்கர்ஷாவிடம் தன் காதலை வெளிப்படுத்தியுள்ளார். இதையடுத்து, உத்கர்ஷா சம்மதம் தெரிவித்துள்ளார். சௌரப் கஸ்பேகர்-உத்கர்ஷா திருமணம் மே 27ஆம் தேதி நடைபெறவுள்ளது என்று தெரிவிக்கப்பபட்டுள்ளது. சௌரப், உத்கர்ஷா இருவரும் தற்போது எம்.டெக்., படித்து வருகின்றனர்.

பேனர் வைத்து காதலை வெளிப்படுத்திய இளைஞர்

ABOUT THE AUTHOR

...view details