நாட்டின் கோவிட்-19 பாதிப்புகள் தொடர்பான பல்வேறு பொதுநல வழக்குகள் டெல்லி, மும்பை, அலகாபாத், கொல்கத்தா, போபால், சிக்கிம் ஆகிய உயர் நீதிமன்றங்களில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இவ்வழக்குகள் விசாரணையில் உள்ள நிலையில், கோவிட்-19 தொடர்பான முக்கிய வழக்குகளை உச்ச நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணைக்கு ஏற்றுள்ளது.
இது தொடர்பாக உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ. பாப்டே தலைமையிலான அமர்வு பிறப்பித்த உத்தரவில், "மேற்கண்ட உயர் நீதிமன்றங்களில் நடக்கும் வழக்குகளின் கண்டறிந்த சில முக்கியமான பிரச்னைகளை விசாரிக்க முடிவெடுத்துள்ளோம்.