டெல்லியில் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நடந்துவருகிறது. அதில் மக்களவையில் இன்று (டிசம்பர் 13) 2022-23ஆம் ஆண்டிற்கான கூடுதல் மானியங்களுக்கான கோரிக்கைகள் மீதான விவாதம் நடந்தது. அப்போது, திரிணாமுல் காங்கிரஸ் எம்பி மஹுவா மொய்த்ரா மத்திய அரசை கடுமையாக விமர்சித்தார். சரமாரியாக கேள்விகளை அடுக்கினார். அந்த வகையில் மொய்த்ரா, நாட்டின் வளர்ச்சி குறித்து நரேந்திர மோடி அரசு "பொய்யை" பரப்பிவருகிறது. இந்த அரசாங்கமும் ஆளும் கட்சியுமே "பப்பு" என்ற வார்த்தையை உருவாக்கின.
இந்த வார்த்தையை இழிவுபடுத்தவும், திறமையின்மையைக் குறிக்கவும் நீங்கள் பயன்படுத்துகிறீர்கள். அப்படியானால், உண்மையான பப்பு யார் என்று நாட்டின் புள்ளிவிவரங்கள் நமக்கு சொல்கின்றன. தேசிய புள்ளியியல் அலுவலகத்தின் தரவுகளின்படி, நாட்டின் தொழில்துறை உற்பத்தி 4 விழுக்காடு சரிந்து 26 மாதங்களில் இல்லாத அளவுக்கு குறைந்துள்ளது. அந்நிய செலாவணி கையிருப்பு ஒரு வருடத்திற்குள் 72 பில்லியன் டாலர்கள் குறைந்துள்ளது. உற்பத்தித் துறையின் மொத்த உற்பத்தி அக்டோபர் மாதம் மட்டும் 5.6 விழுக்காடு குறைந்துள்ளது.