கோவிட்-19 பெருந்தொற்றை இந்தியா எதிர்கொண்ட விதத்தை உலக சுகாதாரா அமைப்பின் தலைமை இயக்குனர் டெட்ரோஸ் அதானோம் வெகுவாக பாராட்டியுள்ளார். இது தொடர்பாக தனது ட்விட்டர் பதிவில், " இந்தியா தனது உறுதியான நடவடிக்கைகள் மூலமாக கோவிட்-19 பாதிப்புக்கு முடிவுக்கட்டும் பாதையில் பயணிக்கிறது. உலகின் மிகப்பெரிய தடுப்பூசி உற்பத்தியாளராகவும் இந்தியா சிறப்பாக செயல்படுகிறது" என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும், நாம் ஒருங்கிணைந்து செயல்பட்டால், பாதுகாப்பான தடுப்பூசிகளை தயாரித்து அனைவரையும் பாதுகாக்கலாம் என பிரதமர் நரேந்திர மோடியை பாராட்டி ட்வீட் செய்துள்ளார்.