லக்னோ: இந்தியாவில் தோன்றாத எந்த மதத்திற்கும் இட ஒதுக்கீட்டின் பலனைப் பெறுவது முற்றிலும் அநியாயம் என்று விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து, விஸ்வ ஹிந்து பரிஷத் தேசிய செய்தித் தொடர்பாளர் விஜய் சங்கர் திவாரி உத்தரப்பிரதேச மாநிலம் கேந்திராவில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது,“மதம் மாறியவர்கள், சாதி அடிப்படையிலான இட ஒதுக்கீடு மட்டுமல்லாமல் சிறுபான்மையினருக்கான திட்டங்களையும் பயன்படுத்துவது என, இரட்டை இட ஒதுக்கீட்டின் பலனை அனுபவித்து வருகின்றனர்.
மதம் மாறுபவர்கள் இட ஒதுக்கீட்டின் பலனைப் பெறக்கூடாது என்று எந்த விஷ்வ ஹிந்து பரிஷத் மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்கவுள்ளது. குறிப்பாக முஸ்லிம்களுக்கும், கிறிஸ்தவர்களுக்கும் எதிர்ப்பாக அழுத்தம் கொடுக்கப்படவுள்ளது.