லக்னோ : உத்தரப் பிரதேசத்தில் உள்ள சங்கத் ஆசிரமத்தில் உள்ள சாமியார் பஜ்ரங் முனி. இவர், சீதாப்பூர் நடந்த நிகழ்ச்சியொன்றில் இஸ்லாமியர்கள் குறித்தும் இஸ்லாமிய பெண்கள் குறித்தும் ஆட்சேபனைக்குரிய கருத்துக்களை கூறினார்.
இது தொடர்பாக வெளியான காணொலிக் காட்சிகளின் அடிப்படையில் சாமியார் பஜ்ரங் முனி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த நிலையில் சாமியார் பஜ்ரங் முனி இன்று காவலர்களால் கைதுசெய்யப்பட்டார். முன்னதாக பஜ்ரங் முனி மீது தேசிய பெண்கள் ஆணையமும் புகார் அளித்துள்ளது.