ஜார்க்கண்ட் மாநிலம்,பலமு பகுதியைச்சேர்ந்த இரானி கும்பல் தொடர்பாக ஜார்க்கண்ட் காவல் துறையினருக்கு உத்தரப்பிரதேச காவல் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. கொள்ளை, வழிப்பறி, ஏமாற்றுதல் போன்ற குற்றச்சம்பவங்களை செய்யும் கும்பல், இரானி கும்பல் ஆகும்.
இது குறித்து பலமு காவல் துறைக்கு உத்தரப்பிரதேச காவல் துறை அனுப்பியுள்ள கடிதத்தில், ’இரானி கும்பலுடன் தொடர்புடைய குற்றவாளிகள் குறித்து தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளதாக’ கூறப்படுகிறது. பலமு எஸ்.பி. சந்தன் குமார், உத்தரப்பிரதேச காவல்துறையிடம் இருந்து கடிதத்தை பெற்றதையும் காவல் துறை அலுவலர்களை எச்சரிக்கையாக இருக்கும்படி கூறியிருப்பதாகவும் கூறினார்.
இரானி கும்பலின் குற்றப்பின்னணி: உத்தரப்பிரதேச மாநிலம், வாரணாசியில் கடந்த மாதம் இந்த இரானி கும்பல் பல குற்றச்சம்பவங்களை நிகழ்த்தியது. இந்தக் கும்பலில் தொடர்புடைய குற்றவாளிகள் காவல் துறையினர் போல் வேடமிட்டு வழிப்பறி, போன்ற குற்றச்சம்பவங்களை செய்து வந்தனர். இதற்கிடையில், இரானி கும்பலைச் சேர்ந்த நான்கு குற்றவாளிகளை வாரணாசி போலீஸார் கைது செய்தனர்.