தமிழ்நாடு

tamil nadu

நிழல் உலக தாதா சோட்டா ராஜன் மருத்துவமனையில் அனுமதி

By

Published : Jul 29, 2021, 7:00 PM IST

வயிற்று வலி காரணமாக நிழல் உலக தாதா சோட்டா ராஜன் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Chhota Rajan
Chhota Rajan

டெல்லி திகார் சிறையில் சிறைவாசம் அனுபவித்துவரும் நிழல் உலக தாதா சோட்டா ராஜன் வயிற்று வலி காரணமாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் கோவிட்-19 தொற்று காரணமாக மருத்துவ சிகிச்சை எடுத்துக்கொண்ட சோட்டா ராஜன், அதன் பக்க விளைவால் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

அவரது உடல்நிலை குறித்து உரிய தகவல்கள் உடனுக்குடன் தெரிவிக்கப்படும் என எய்ம்ஸ் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

61 வயதான சோட்டா ராஜன் மீது 70க்கும் மேற்பட்ட கிரிமினல் வழக்குகள் உள்ளன. 2015ஆம் ஆண்டு இந்தோனேசியாவில் பதுங்கியிருந்த சோட்டா ராஜனை கைது செய்த இந்திய காவல்துறை, தாயகம் கொண்டுவந்தது.

கொலை வழக்கில் குற்றம் உறுதியான நிலையில் திகார் சிறையில் சோட்டா ராஜன் ஆயுள் தண்டனை அனுபவித்துவருகிறார்.

இதையும் படிங்க:பிரதமர் மோடி - பசவராஜ் பொம்மை நாளை சந்திப்பு

ABOUT THE AUTHOR

...view details