தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

"உதய்பூர் படுகொலை பயங்கரவாத தாக்குதல் கிடையாது" ராஜேந்திர யாதவ் - உதய்பூர் டெய்லர் கொலை

உதய்பூர் படுகொலை சம்பவம் பயங்கரவாத தாக்குதல் கிடையாது என்று ராஜஸ்தான் இணை அமைச்சர் (உள்துறை) ராஜேந்திர யாதவ் தெரிவித்தார்.

udaipur-murder-was-not-a-terror-attack-says-rajasthan-minister-rajendra-yadav
udaipur-murder-was-not-a-terror-attack-says-rajasthan-minister-rajendra-yadav

By

Published : Jul 3, 2022, 1:23 PM IST

ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலம், உதய்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த டெய்லர் கன்ஹைய லால் ஜூன் 28ஆம் தேதி இரண்டு நபர்களால் தலை துண்டிக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டார். இந்தச் சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. நபிகள் நாயகம் குறித்து சர்ச்சைக்கருத்து தெரிவித்த பாஜக முன்னாள் செய்தித்தொடர்பாளர் நூபுர் சர்மாவுக்கு ஆதரவாக சமூக வலைதளங்களில் கன்ஹைய லால் கருத்துப்பதிவு செய்ததால், அவர் கொலை செய்யப்பட்டதாகத் தெரியவந்தது.

இதையடுத்து கொலையாளிகள் ரியாஸ் அக்தாரி, கௌஸ் முகமது என்பவர்கள் வெளியிட்ட வீடியோவில், இந்த கொலையை தங்கள் செய்ததாக ஒப்புக் கொண்டும், பிரதமர் மோடிக்கு மிரட்டல் விடுத்தும் பேசியிருந்தனர். இந்த வீடியோ வெளியான சில மணி நேரங்களிலேயே இருவரும் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கை தேசிய புலனாய்வு முகமைக்கு மாற்றி மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டது.

என்ஐஏவின் முதல்கட்ட விசாரணையில், இவர்களுக்கும் பயங்கரவாத அமைப்புக்கும் தொடர்பில்லை என்றும் அடுத்தக்கட்ட விசாரணையில் உண்மை தெரியவரும் என்று தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில், ராஜஸ்தான் இணை அமைச்சர் (உள்துறை) ராஜேந்திர யாதவ் நேற்று (ஜூலை 2) செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர், "உதய்பூர் சம்பவம் பயங்கரவாத தாக்குதல் அல்ல. குற்றம் சாட்டப்பட்டவரில் ஒருவர் ராஜஸ்தான் மாநில எதிர்க்கட்சித் தலைவர் குலாப்சந்த் கட்டாரியாவுடன் இருக்கும் புகைப்படம் வெளியாகியுள்ளது. இதுபெரும் சர்ச்சையாக உருவெடுத்துள்ளது. இதன் உண்மை தன்மை குறித்து விசாரித்து அறிக்கை வெளியிடப்படும்" என்றார்.

இதையும் படிங்க:வீடியோ: விபத்தில் சிக்கியவருக்கு உதவிய ராகுல் காந்தி

ABOUT THE AUTHOR

...view details