தமிழ்நாடு

tamil nadu

தண்டவாளத்தில் ரீல்ஸ் செய்த இளைஞர்களுக்கு நேர்ந்த சோகம்!

By

Published : Jan 2, 2023, 10:17 PM IST

ரயில்வே பாலத்தில் இருந்து ரீல்ஸ் செய்த இளைஞர்கள் மீது ரயில் மோதிய விபத்தில் இருவர் தூக்கி வீசப்பட்டு உயிரிழந்தனர். ரயில் வருவதைக் கண்டு மூன்றாவது இளைஞர் ஆற்றில் குதித்த நிலையில், படுகாயங்களுடன் மீட்கப்பட்டுள்ளார்.

ரீல்ஸ்
ரீல்ஸ்

ககாரியா(பீகார்):பீகார் மாநிலம், ககாரியாவைச் சேர்ந்த மூன்று இளைஞர்கள் புத்தாண்டு கொண்டாட்டத்தை ரீல்ஸ் செய்து வெளியிட முயன்றுள்ளனர். இதற்காக ஆபத்தை உணராமல் ரயில்வே பாலத்தில் நின்று ரீல்ஸ் வீடியோ எடுத்துள்ளனர். திடீரென பாலத்தில் ரயில் வந்த நிலையில் செய்வதறியாது இளைஞர்கள் திகைத்துள்ளனர்.

கண்ணிமைக்கும் நேரத்தில் இளைஞர்கள் மீது ரயில் மோதியது. இதில் இரு இளைஞர்கள் ரயில் மோதிய வேகத்தில் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் மற்றொரு இளைஞர் சாமர்த்தியமாக ரயில் வரும்போது பாலத்தில் இருந்து கீழே குதித்துள்ளார்.

ஆற்றில் விழுந்த இளைஞரை ஊர் மக்கள் பத்திரமாக மீட்டனர். படுகாயங்களுடன் இளைஞர் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகிறார். புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது ரயில்வே பாலத்தில் ரீல்ஸ் செய்த இளைஞர்கள் ரயில் மோதி உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க:ஒரே இரவில் 15,000 கிலோ ஹைதராபாத் பிரியாணி விற்பனை: அதற்கு அவ்வளவு மகிமையா?

ABOUT THE AUTHOR

...view details