கொச்சி: கேரளாவில் பகவந்த் சிங் என்ற மந்திரவாதி, செல்வ செழிப்பு அதிகரிக்க வேண்டும் என்பதற்காக, எர்ணாகுளம் மாவட்டம் கடவந்திரா பகுதியைச் சேர்ந்த பத்மம் (52), காலடியைச் சேர்ந்த ரோசிலி (50) ஆகிய இரண்டு பெண்களை கடத்தி நரபலி கொடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதில் பத்மம் என்ற பெண்மணி, தமிழ்நாட்டின் தருமபுரி பகுதியில் வசித்து வந்தவர் என தெரிவிக்கப்பட்டது. இந்த சம்பவத்தில் மந்திரவாதி பகவந்த் சிங், அவரது மனைவி, முகமது ஷாபி ஆகிய மூவரை போலீசார் கைது செய்தனர்.
இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தியதில், அதிர வைக்கும் பல கொடூரமான தகவல்கள் வெளியாகியுள்ளன. போலீசாரின் தகவல்படி, "எர்ணாகுளத்தைச் சேர்ந்த ஷாபி பல ஏமாற்று வேலைகளை செய்து பணம் பறிப்பதை வாடிக்கையாக கொண்டவர். அவர், ஶ்ரீதேவி என்ற பெயரில் முகநூலில் போலியான கணக்கை உருவாக்கி, அதன் மூலம் மந்திரவாதியான திருவல்லாவைச் சேர்ந்த பகவந் சிங்குடன் நட்பாக பழகியுள்ளார்.
ஶ்ரீதேவியாக பகவந்த் சிங்கிடம் பேசிய ஷாபி, பெரும்பாவூரில் ரஷீத் என்று ஒரு பெரிய துறவி இருப்பதாகவும், அவர் நினைத்தால் உங்களை பணக்காரர் ஆக்குவார் என்றும் கூறியுள்ளார். இதையடுத்து பகவந்த் சிங் தொடர்பு கொண்டதால், ஷாபி ரஷீத்தான பகவந்த் சிங் வீட்டுக்குள் சென்றுள்ளார். மூட நம்பிக்கைகளில் மூழ்கியிருந்த பகவந்த் சிங்கையும், அவரது மனைவியையும் ஏமாற்றி, மன ரீதியாகவும் உடல் ரீதியாகவும் துஷ்பிரயோகம் செய்துள்ளார்.