தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

குஜராத்தில் சிலிண்டர் வெடித்து தந்தை மகன் உயிரிழப்பு - விபத்து செய்திகள்

குஜராத் மாநிலம் ராஜ்கோட் மாவட்டத்தில் எரிவாயு சிலிண்டர் வெடித்ததில் ஏற்பட்ட விபத்தில் இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

சிலிண்டர் வெடித்து தந்தை மகன் உயிரிழப்பு
சிலிண்டர் வெடித்து தந்தை மகன் உயிரிழப்பு

By

Published : Sep 24, 2021, 3:11 PM IST

ராஜ்கோட் மாவட்டத்தின் உப்லெட்டா பகுதியில் கட்லரி மார்க்கெட் இயங்கி வருகிறது. இங்கு, இன்று (செப்.24) திடீரென வெடி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் தந்தை, மகன் இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர், விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். இதற்கிடையில் அங்கு வந்த காவல் துறையினர், உயிரிழந்த தந்தை, மகன் ஆகியோரை மீட்டு உடற்கூராய்வுக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

சிலிண்டர் வெடித்து தந்தை மகன் உயிரிழப்பு

மேலும், இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், விசாரணை நடத்தி வருகின்றனர். முதல்கட்ட விசாரணையில் எரிவாயு சிலிண்டர் வெடித்ததன் காரணமாக இந்த விபத்து ஏற்பட்டது தெரியவந்தது. தொடர்ந்து விபத்து குறித்து காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க:பெங்களூரில் குண்டு வெடிப்பு - மூவர் உயிரிழப்பு இருவர் படுகாயம்

ABOUT THE AUTHOR

...view details