ஜம்மு-காஷ்மீரின் குல்காம் மாவட்டத்தில் உள்ள டோங்டவுன் பகுதியில் இன்று (டிச.22) அதிகாலை பயங்கரவாதிகளுக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.
இந்த மோதலின்போது பயங்கரவாதிகள் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதன் பின்னர் பாதுகாப்புப் படையினர், எதிர் தாக்குதல் நடத்தி பதிலடி கொடுத்தனர். இந்தத் தாக்குதலில் உயிரிழப்புகள் ஏதுவும் நிகழவில்லை. ஆனால் இரண்டு பயங்கரவாதிகள் சரணடைந்தனர்.