ஹைதராபாத்:தெலங்கானா மாநிலம் யாதகிரிகுட்டாவில் இன்று (ஏப். 29) இரண்டு மாடி கட்டடம் இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் நான்கு பேர் உயிரிழந்தனர். பலர் படுகாயமடைந்தனர். இதையடுத்து தீயணைப்புத்துறை, காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
அதனடிப்படையில், அங்குவிரைந்த போலீசார் நான்கு பேரின் உடல்களையும் மீட்டு மருத்துமனைக்கு அனுப்பிவைத்தனர். அதோடு படுகாயமடைந்தவர்களுக்கு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவருகின்றனர்.