பரேலி(உத்தரப்பிரதேசம்): திப்ருகரில் இருந்து டெல்லி செல்லும் ராஜ்தானி எக்ஸ்பிரஸ் ரயில், உத்தரப்பிரதேச மாநிலம் பரேலி சந்திப்பில் நின்றது. அங்கிருந்து ரயில் புறப்பட்டபோது, ராணுவ வீரர் ஒருவர் ஓடும் ரயிலில் ஏறியுள்ளார். இதைப் பார்த்த ரயில் டிக்கெட் பரிசோதகர், ராணுவ வீரருடன் வாக்குவாதம் செய்துள்ளார்.
வாக்குவாதம் முற்றிய நிலையில், டிக்கெட் பரிசோதகர் ராணுவ வீரரை ஓடும் ரயிலில் இருந்து வெளியே தள்ளிவிட்டதாகத் தெரிகிறது. ராணுவ வீரர் தண்டவாளத்திற்கும், நடைமேடைக்கும் இடையே சிக்கிக் கொண்டார். இதில் வீரரின் இரண்டு கால்களும் துண்டிக்கப்பட்டன. ராணுவ வீரர் உயிருக்கு ஆபத்தான நிலையில், ராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.