ஹைதராபாத்: தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்திற்கு, பிற மாநிலங்களில் இருந்து, ஆண்டுக்கு 10ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாகனங்கள் வருவதாக தெரிகிறது. அதாவது பிற மாநிலத்திலிருந்து ஹைதராபாத்திற்கு குடிபெயர்பவர்கள், பிற மாநில பதிவு எண் கொண்ட வாகனங்களை எடுத்து வந்து பயன்படுத்துகிறார்கள். இந்த எண்ணிக்கை கணிசமாக அதிகரித்ததால் தெலங்கானா மாநில அரசு புதிய கட்டுப்பாட்டை விதித்துள்ளது.
அதன்படி வெளிமாநிலத்தைச் சேர்ந்த வாகனங்களுக்கு தெலங்கானா மாநில பதிவு எண் பெற வேண்டியது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. என்ஓசி (ஆட்சேபனை இல்லை சான்றிதழ்) பெற்றிருந்தாலும், தெலங்கானாவுக்கு வந்த உடனேயே, தெலங்கானா மாநில பதிவு எண்ணுக்கு மாற்றிக் கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.