தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

சாலையோர வீட்டின்மீது சரக்கு வாகனம் மோதிய விபத்தில் 4 பேர் உயிரிழப்பு - மெயின்புரி சாலை விபத்தில் நான்கு பேர் உயிரிழப்பு

உத்தரப்பிரதேச மாநிலம் மெயின்புரியில் சரக்கு வாகனம் ஒன்று சாலையோர வீட்டின் மீது மோதிய விபத்தில் 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

Truck
Truck

By

Published : Aug 16, 2022, 4:14 PM IST

மெயின்புரி: உத்தரப்பிரதேச மாநிலம், மெயின்புரியில் நேற்றிரவு(ஆக.15) அதிவேகமாக சென்ற சரக்கு வாகனம் ஒன்று, சாலையோரம் இருந்த வீட்டின் மீது மோதி விபத்துக்குள்ளானது.

அப்போது வீட்டின் சுவர்கள் இடிந்து விழுந்ததில், வீட்டில் உறங்கிக்கொண்டிருந்த தம்பதியினர் இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்தனர். அதேபோல் வாகனத்தில் சென்ற ஏழு பேரில் இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 5 பேர் படுகாயமடைந்தனர். விபத்து குறித்து தகவலறிந்து சம்பவ இடத்துக்குச்சென்ற போலீசார், படுகாயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் ஜேசிபி வாகனம் மூலம் இடிபாடுகளை அகற்றி, அதில் சிக்கியிருந்த ஒருவரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். படுகாயமடைந்தவர்களில் இருவரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாகவும், மூன்று பேருக்கு லேசான காயம் ஏற்பட்டுள்ளதாகவும் போலீசார் தகவல் தெரிவித்தனர்.

இதையும் படிங்க: காஷ்மீரில் வீரர்கள் சென்ற பேருந்து பள்ளத்தாக்கில் கவிழ்ந்தது

ABOUT THE AUTHOR

...view details