தமிழ்நாடு

tamil nadu

By

Published : Nov 2, 2022, 7:15 AM IST

Updated : Nov 2, 2022, 7:24 AM IST

ETV Bharat / bharat

ஒரே வீட்டில் 3 பேர் படுகொலை; டெல்லியில் கொடூரம்...!

டெல்லியில் வீட்டிலிருந்த கணவன், மனைவி மற்றும் பணிப்பெண் படுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஒரே வீட்டில் இருந்த மூவர் படுகொலை; டெல்லியில் கொடூரம்
ஒரே வீட்டில் இருந்த மூவர் படுகொலை; டெல்லியில் கொடூரம்

புதுடெல்லி:டெல்லியில் சமீர் அஹுஜா என்பவர் மற்றும் அவரது மனைவி ஷாலு ஆகியோர் அசோக் நகர் பகுதியில் நான்கு மாடி வீட்டில் வசித்து வந்தனர். இந்நிலையில் இந்த இரண்டு பேர் மற்றும் அவர்கள் வீட்டில் பணிபுரிந்த பணிப்பெண் சப்னா ஆகியோர் கொலை செய்யப்பட்டுள்ளனர்.

இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் உடல்களை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் இதுகுறித்து காவல்துறையினர் கூறுகையில், மர்ம நபர்கள், வீட்டில் இருந்த கணவன்-மனைவியை கத்தியால் குத்தி கொன்றுள்ளனர், அப்போது பணிப்பெண் வீட்டுக்குள் சென்றபோது அவரையும் மர்ம நபர்கள் கொன்றுள்ளனர். ஷாலு மற்றும் பணிப்பெண் சப்னாவின் சடலங்கள் நான்கு மாடி வீட்டின் தரை தளத்தில் கண்டுபிடிக்கப்பட்டன, அதே நேரத்தில் சமீர் அஹுஜாவின் உடல் மேல் தளத்தில் கண்டெடுக்கப்பட்டது.

நான்கு முதல் ஐந்து பேர் வரை வந்த கொலையாளிகள் கணவன்-மனைவியை கொன்றுவிட்டதாக சந்தேகிக்கப்படுகிறது. அதே நேரத்தில் பணிப்பெண் சப்னா வந்ததால், அவரையும் மர்ம நபர்கள் கொன்றதாக தெரிகிறது.

இருப்பினும், இந்த நேரத்தில் சமீர் மற்றும் ஷாலுவின் மூன்று வயது சிறுமி மற்றொரு அறையில் தூங்கிக் கொண்டிருந்துள்ளார், ஆனால் மர்ம நபர்கள் அவளை எதுவும் செய்யவில்லை. மேலும், அந்த சிறுமி குறித்த மர்ம நபர்களுக்கு தெரியாமல் இருக்கலாம் என தெரிகிறது. தற்போது அந்த பெண் காவல்துறையினருடன் உள்ளார்.

மர்ம நபர்கள் வீட்டுக்குள் நுழையும் முன், வெளியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவின் வயரையும் அகற்றியுள்ளனர். ஆகையால் கொலையாளிகள் குடும்பத்தை முன்கூட்டியே அறிந்திருந்து, நன்கு திட்டமிட்டு கொலை செய்திருக்கலாம் எனவும் சந்தேகிக்கப்படுகிறது.

இந்த சம்பவம் குறித்த அனைத்து கோணங்களிலும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. மேலும் கொலை வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது" என தெரிவித்தனர்.

இதையும் படிங்க:மனைவியுடன் சேர்ந்து தனது தாயை எரித்துக் கொன்ற மகன்; நெல்லையில் பயங்கரம்..

Last Updated : Nov 2, 2022, 7:24 AM IST

ABOUT THE AUTHOR

...view details