தமிழ்நாடு

tamil nadu

By

Published : Dec 7, 2021, 6:57 PM IST

ETV Bharat / bharat

வெளிநாட்டிலிருந்து இந்தியா வரும் பயணிகளுக்கு புதிய வழிகாட்டு நெறிமுறை

ஒமைக்ரான் தொற்று பரவலை அடுத்து வெளிநாட்டிலிருந்து இந்தியா வரும் விமானப் பயணிகளுக்கு புதிய வழிகாட்டு நெறிமுறைகளை அரசு அறிவித்துள்ளது.

Union Ministry of Civil Aviation, Ministry of Health & Family Welfare
Union Ministry of Civil Aviation

தீவிரமாகப் பரவிவரும் ஒமைக்ரான் தொற்றிலிருந்து பாதுகாக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக விமானப் போக்குவரத்து அமைச்சகம் மற்றும் சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம் புதிய வழிகாட்டு நெறிமுறைகள் குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

அதன்படி, "இந்தியாவிற்கு வரும் சர்வதேச பயணிகளுக்கு வசதி அளிக்கும் நோக்கில், ஏர் சுவிதா தளத்தில் தொடர்பில்லா சுய அறிவிப்பை விமானப் போக்குவரத்து அமைச்சகம் மற்றும் சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம் கட்டாயமாக்கியுள்ளன.

ஆகஸ்ட் 2020இல் தொடங்கப்பட்ட ஏர் சுவிதா தளம், 2021 நவம்பர் 30ஆம் தேதி அன்று வெளியிடப்பட்ட பயண வழிகாட்டுதல்களுக்கு இடமளிக்கும் வகையில் இப்போது பலப்படுத்தப்பட்டுள்ளது.

இந்தியாவில் சர்வதேச பயணிகளின் வருகையை எளிதாக்கும் வகையில் விமானப் போக்குவரத்து அமைச்சகத்தால் உருவாக்கப்பட்ட இந்தத் தளம், ஆர்டிபிசிஆர், தடுப்பூசி நிலை போன்றவற்றுடன் பயணிகளின் பயணம் மற்றும் தங்கும் விவரங்களை வழங்குவதற்கு உதவுகிறது.

இந்தியாவிற்கு வரும் அனைத்து சர்வதேச பயணிகளுக்கும் தொந்தரவு இல்லாத, வரிசை இல்லாத மற்றும் வசதியான விமானப் பயணத்தை வழங்குவதை ஏர் சுவிதா நோக்கமாகக் கொண்டுள்ளது.

டிசம்பர் 1, 2021 முதல் டிசம்பர் 5, 2021 வரை 2,51,210 பயணிகளுக்கு ஏர் சுவிதா தளம் ஏற்கனவே உதவி செய்துள்ளது. மேலும், ஆகஸ்ட் 2020இல் ஏர் சுவிதா தளம் தொடங்கப்பட்டதில் இருந்து ஒரு கோடிக்கும் அதிகமான பயணிகள் பயனடைந்துள்ளனர்.

கோவிட்-19 வைரஸின் ஒமைக்ரான் வகையை தடுப்பதை உறுதி செய்வதற்காக ஏர் சுவிதா தளத்தில் இருந்து விலக்கு படிவங்கள் நீக்கப்பட்டுள்ளன. மேலும், இந்தியாவிற்கு வரும் அனைத்து சர்வதேச பயணிகளுக்கும் விவரங்களை நிரப்புவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது." இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:8 மாணவர்கள் மதமாற்றம்? - கிறிஸ்தவப் பள்ளி மீது இந்து அமைப்பினர் தாக்குதல்

ABOUT THE AUTHOR

...view details