தமிழ்நாடு

tamil nadu

120 அடி உயரத்தில் இருந்து தவறி விழுந்த திருமண ஜோடி - செல்ஃபி எடுக்க முயன்றதால் விபரீதம்

By

Published : Dec 10, 2022, 12:35 PM IST

கேரளாவைச் சேர்ந்த திருமணம் செய்ய இருக்கும் தம்பதியினர் 120 அடி உயரத்தில் இருந்த கிரானைட் குவாரி மீது நின்று செல்ஃபி எடுக்க முயன்றபோது தவறி குவாரியில் இருந்த குளத்தில் விழுந்தனர்.

Etv Bharat120 அடி உயரத்தில் இருந்து தவறி விழுந்த திருமண ஜோடி -  செல்பி எடுக்க  முயன்றதால் விபரீதம்
Etv Bharat120 அடி உயரத்தில் இருந்து தவறி விழுந்த திருமண ஜோடி - செல்பி எடுக்க முயன்றதால் விபரீதம்

கேரளா:கொல்லம் மாவட்டம், பாரிபுள்ளி வேலமனூரில் உள்ள காட்டுபுரம் குவாரியில் திருமணம் நடக்க இருந்த ஜோடிகளான சாண்ட்ரா, வினு கிருஷ்ணன் ஆகியோர் திருமண புகைப்படம் எடுக்க சென்றனர். இதனையடுத்து மணமகன் வினு செல்ஃபி எடுக்க முயன்ற போது சாண்ட்ரா தவறி 120 அடி உயரத்தில் இருந்து குவாரியில் இருந்த குளத்தில் விழுந்தார்.

இதனையடுத்து அவரை காப்பாற்ற வினு கிருஷ்ணனும் உள்ளே குதித்தார். சாண்ட்ராவை நீரில் மூழ்காமல் வினு காப்பாற்றினார். இருவரும் அருகே இருந்த பாறையின் மீது அமர்ந்திருந்தனர். பின்னர் அருகில் இருந்த தொழிலாளர்கள் தீயணைப்புத் துறைக்கு தகவல் அளித்ததையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த மீட்புக் குழுவினர் இருவரையும் கரைக்கு கொண்டு வந்தனர். தற்போது இருவரும் கொல்லத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். திருமணம் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

120 அடி உயரத்தில் இருந்து தவறி விழுந்த திருமண ஜோடி - செல்பி எடுக்க முயன்றதால் விபரீதம்

இதையும் படிங்க:மருவிய பாலினத்தவர், LGBTQIA+ குறித்து விழிப்புணர்வு - தமிழ்நாடு அரசு பதில்

ABOUT THE AUTHOR

...view details