பெர்காம்பூர்: மேற்குவங்க மாநிலத்தில் தோட்டக்கலை மற்றும் உணவு பதப்படுத்துதல் துறை அமைச்சர் சுப்ரதா சாஹா-வுக்கு(72) அண்மையில் கொல்கத்தாவில் பித்தப்பை அறுவை சிகிச்சை நடைபெற்றது. மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த அவர் நேற்று(டிச.28) காலையில் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.
இந்த நிலையில், சுப்ரதா சாஹாவுக்கு நேற்றிரவு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து முர்ஷிதாபாத் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், இன்று காலையில் அவர் உயிரிழந்தார். மூளை பக்கவாதம் காரணமாக அவர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது.