தமிழ்நாடு

tamil nadu

By

Published : May 31, 2022, 11:27 AM IST

ETV Bharat / bharat

கேரளா மூணாரில் புலி தாக்குதல் - பசுமாடு உயிரிழப்பு

கேரளா மாநிலம் மூணாரரில் மீண்டும் புலி தாக்கியதில் பசு மாடு உயிரிழந்தது.

கேரளா மூணார் பகுதியை வேட்டையாடும் புலி
கேரளா மூணார் பகுதியை வேட்டையாடும் புலி

கேரளா: மூணார் அருகே பெரியவாரை எஸ்டேட் பகுதியில் அப்புராஜூ என்பவருக்கு சொந்தமான பசு மாடு ஒன்று மேய்ந்து கொண்டு இருந்தது. இந்த பகுதியின் அருகே தேயிலை தோட்ட தொழிலாளர்கள் குடியிருப்பும் அமைந்துள்ளது

இந்த நிலையில் பிற்பகலில் அங்கு வந்த புலி ஒன்று அங்கிருந்த பசுவை தாக்கி கொன்றது. பசுவில் அலறல் சத்தத்தை கேட்ட அந்த பகுதி மக்கள் விரைந்து வரவே அங்கிருந்து புலி தப்பி ஓடியது. கடந்த 2 மாதங்களுக்கு முன்பு இதே அப்புராஜூக்கு சொந்தமான இரண்டு பசுமாடுகளை புலி தாக்கி கொன்ற நிலையில் மீண்டும் மற்றொரு பசுவையும் புலி தாக்கி கொன்றுள்ளது

கடந்த 6 மாதங்களில் இதே பகுதியில் 8 பசு மாடுகளை புலி கொன்றுள்ளது. ஏற்கனவே முதுமலையில் T23 என்கிற புலி 4 பேரை வேட்டையாடி கொன்றதால் மூணார் பகுதி மக்கள் மிகுந்த அச்சத்தில் உள்ளனர்.

இதையும் படிங்க: 2 கிலோ தங்க செயினில் 3 மி.கி. மட்டுமே தங்கம்: ரூ.1 லட்சத்துடன் தப்பியவர்களை தேடும் போலீஸ்!

ABOUT THE AUTHOR

...view details