போபால்: மத்தியப் பிரதேசத்தின் பிந்த் மாவட்டத்தில் உள்ள பச்சேரா கிராமத்தில் நேற்று (ஜனவரி 15) ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் சுட்டுக் கொலை செய்யப்பட்டனர். இதுகுறித்து தகவலறிந்த போலீசார் சம்பவிடத்துக்கு விரைந்து உடல்களை மீட்டு உடற்கூராய்வுக்கு அனுப்பிவைத்தனர். முதல்கட்ட தகவலில், ஹக்கீம், கோலு மற்றும் பிங்கு உயிரிழந்தது தெரியவந்தது.
ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் சுட்டுக் கொலை
மத்திய பிரதேச மாநிலத்தில் பஞ்சாயத்து தேர்தலில் வெற்றி பெற்றதற்காக ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் நேற்று (ஜன.15) எதிர் தரப்பினரால் சுட்டு படுகொலை செய்யப்பட்டனர்.
Etv Bharatமத்திய பிரதேசத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் சுட்டுக்கொலை - அரசியல் முன்பகை காரணமா?
இவர்கள் மூவரும் பச்சேரா கிராமத்தில் நடந்த உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளனர். இதனால் இவர்களுக்கும் நிஷாந்த் தியாகி என்பவரது தரப்பினருக்கும் முன்விரோதம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் நிஷாந்த் தியாகி தரப்பினர் துப்பாக்கிச் சூடு நடத்தி 3 பேரையும் கொன்றுள்ளனர். இதனிடையே அவர்கள் தலைமறைவாகினர். இவர்கள் போலீசார் தேடிவருகின்றனர்.
இதையும் படிங்க:China Manja: சீன மாஞ்சா நூல் அறுத்து சிறுவன் காயம்.. 120 தையல் போட்டு உயிர் மீட்பு...