தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

பல கோடி மதிப்புள்ள நிலங்களை கையாடல் செய்த ஆந்திர முதலமைச்சரின் குடும்பம் - Indu Projects debt log

ஆந்திரா முன்னாள் முதலமைச்சர் ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டி, அவரது பதவிக்காலத்தில் அனந்தபூர் மாவட்டத்தில் ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலத்தை லேபாக்ஷி நாலெட்ஜ் ஹப் என்ற பெயரில், அவரின் நண்பர்களுக்கு ஒதுக்கியது மத்திய புலனாய்வுத் துறையின் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

Etv Bharatபல கோடி மதிப்பிலான நிலங்களை  கையாடல் செய்த ஆந்திர முதலமைச்சர் குடும்பம்
Etv Bharatபல கோடி மதிப்பிலான நிலங்களை கையாடல் செய்த ஆந்திர முதலமைச்சர் குடும்பம்

By

Published : Aug 24, 2022, 3:08 PM IST

Updated : Aug 24, 2022, 3:27 PM IST

அமராவதி(ஆந்திரா): ஆந்திராவின் முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி மற்றும் அவரது குடும்பத்தினரால் லேபாக்ஷி நாலெட்ஜ் ஹப் (Lepakshi Knowledge Hub) என்ற நிறுவனத்தின் மூலம் பல கோடி மதிப்புள்ள நிலங்கள் கையாடல் செய்யப்பட்டுள்ளதாக சிபிஐ தெரிவித்துள்ளது.

‘ இந்து புராஜெக்ட்ஸ்’ என்ற பெயரால் அடமானம் வைக்கப்பட்ட மதிப்புமிக்க நிலங்கள் கொள்ளையடிக்கப்பட்டது தெரியவந்துள்ளது. மேலும் இத்திட்டத்தின் மூலம் ரூ.2,500 கோடி மதிப்புள்ள நிலம் ரூ.500 கோடிக்கு பெயரளவுக்கு வாங்கப்பட்டது. இந்நிலையில் ரூ.4,531 கோடி மதிப்புள்ள நிலத்தை ரூ.2,500 கோடிக்கு கடனாக வழங்க வங்கிகள் ஏன் தயாராக உள்ளன? இந்த செயல்முறையில் மாநில அரசின் பங்கு என்ன? இந்து புராஜெக்ட்ஸ் அனைத்து செயல்முறையையும் தெளிவாக விசாரித்தால், ஒவ்வொரு கட்டத்திலும் எந்த அளவுக்கு முறைகேடுகள் நடந்துள்ளன என்பது அம்பலமாகும்.

ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டி ஒருங்கிணைந்த ஆந்திரப்பிரதேசத்தின் முதலமைச்சராக இருந்தபோது, ​​அனந்தபூர் மாவட்டத்தில் ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலம் லேபாக்ஷி நாலெட்ஜ் ஹப்(Lepakshi Knowledge Hub) என்ற நிறுவனத்தின் பெயரில், அவரது நெருங்கிய நண்பர்களுக்கு ஒதுக்கப்பட்டதாக சிபிஐ தெரிவித்துள்ளது. மேலும் இவை அனைத்தும் ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டியின் மகன் ஜெகன்மோகன் ரெட்டியின் தூண்டுதலின் பேரில் நடந்ததாக மத்திய புலனாய்வு அமைப்பான சிபிஐ தெரிவித்துள்ளது.

’இந்து புராஜெக்ட்ஸ்’ என்பது ஷியாம்பிரசாத் ரெட்டி என்பவரின் நிறுவனமாகும். அவர்தான் 'இந்து புராஜெக்ட்ஸ்' செயல்பாட்டில் முக்கியப்பங்கு வகித்தார். இந்து புராஜெக்ட்ஸானது, அதன் கடனால் சில ஆண்டிற்கு முன்பு திவாலாகிவிட்டது. கடந்த மார்ச் 2019 நிலவரப்படி இந்நிறுவனத்திற்கு, வங்கிகள் மற்றும் பிற நிறுவனங்களுக்கு வழங்க வேண்டிய கடன் ரூ. 4,531.44 கோடி நிலுவையில் உள்ளது.

இந்து நிறுவனத்தின் திவால்நிலையைத் தீர்க்கும் பொறுப்பை ஹைதராபாத்தில் உள்ள தேசிய நிறுவன சட்டத் தீர்ப்பாயம்- NCLT துறையினை எடுத்துக்கொண்டது. இதன் ஒரு பகுதியாக, கடனாளர்களால் கோரப்பட்ட ரூ.4,531.44 கோடியில், ரூ.4,138.54 கோடி கடன் திவால் பொறிமுறையால் அங்கீகரிக்கப்பட்டுள்ளன.

எர்தின் புராஜெக்ட் முன்மொழிவு: இந்த தொகையை கடன் பிரச்னையைத்தீர்க்க கே.ராமச்சந்திர ராவின் முதலீடு மற்றும் எர்தின் புராஜெக்ட் வழங்கும் ரூ. 500 கோடியை செலுத்தும் முன்மொழிவுக்கு கடன் வழங்குநர்கள் குழு ஒப்புக்கொண்டது. மேலும் சட்ட தீர்ப்பாயத்தின் ஒப்புதலும் முடிந்துவிட்டது. நிறுவனத்தின் உரிமையை மாற்றிய பிறகு மேற்கொள்ளப்படும் பணிகளுக்கு, நிறுவனம் கூடுதலாக ரூ.40 கோடியை செயல்பாட்டு மூலதனமாக வழங்க வேண்டும். இந்த கூடுதல் தொகையை கூட எர்தின் கன்சார்டியம் வங்கிகளுக்கு செலுத்தாமல் உள்ளது.

பலகோடி மதிப்புள்ள நிலங்கள்: பெங்களூருவில் இருந்து ஹைதராபாத் செல்லும் வழியில், ஆந்திர எல்லையில் தொடங்கி, 18 கி.மீ. எல்லைக்குள் சாலையின் இருபுறமும் லேபாக்ஷி நிறுவனத்தின் நிலங்கள் உள்ளன. ஆந்திராவின் எல்லையில் இருந்து கர்நாடகாவை நோக்கி சுமார் 65 கி.மீ., தொலைவில் பெங்களூரு சர்வதேச விமான நிலையம் அதே சாலையில் அமைந்துள்ளது.

பல கோடி மதிப்புள்ள நிலங்களை கையாடல் செய்த ஆந்திர முதலமைச்சரின் குடும்பம்

இதன் மூலம் ரியல் எஸ்டேட் துறையின் கணிப்புப்படி இந்த நிலங்கள் அதிக மதிப்பு வாய்ந்தவையாகும். இதுகுறித்து கடந்த 2013-ம் ஆண்டு லேபாக்ஷி நில ஊழல் தொடர்பாக சிபிஐ தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையில், அந்த நிலங்களின் மதிப்பு அப்போது சராசரியாக ரூ.15 லட்சமாக கணக்கிடப்பட்டுள்ளது.

எல்லைப்பகுதியில் அமைந்துள்ள 8,844 ஏக்கரின் மொத்த மதிப்பு ரூ.1,326.60 கோடியாக இருக்கும் என்று தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. தற்போதைய திவால் நடவடிக்கையின்படி, எர்தின் புராஜெக்ட்ஸ் நிறுவனத்துக்குச் சொந்தமாகப் போகும் 4,191 ஏக்கரின் மதிப்பு, 2013-ம் ஆண்டு மதிப்பீட்டின்படி ரூ.628.65 கோடி ஆகும். இந்த ஒன்பது ஆண்டுகளில், இப்பகுதியில் பல மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. ஆந்திரப் பிரதேசத்தின் எல்லையில் இருந்து ஹைதராபாத் நோக்கி 25 கி.மீ. தொலைவில் கியா கார் தொழில் நிறுவப்பட்டது. சுற்றியுள்ள பகுதிகளில் பல தொடர்புடைய தொழில்களும் வந்துள்ளன. இதனால், நிலத்தின் மதிப்பு கடுமையாக உயர்ந்துள்ளது. தற்போது லேபாக்ஷி நாலெட்ஜ் ஹப் பகுதியில் உள்ள புற நிலங்கள் ரூ.1 கோடி வரையிலும், உள் நிலங்கள் ரூ.30 முதல் 40 லட்சம் வரையிலும் விலையுயர்ந்துள்ளன.

மேலும் ஹைதராபாத்தில் இன்னும் பல இடங்களில் கையாடல் செய்யப்பட்ட நிலங்கள் என இவை அனைத்தையும் பறிமுதல் செய்து ரூ.477 கோடி வரை வங்கிகள் தள்ளுபடி செய்யத்தயாராக உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. வழக்கமாக சாதராண வங்கி வாடிக்கையாளர் ஒருவர் வீடு வாங்க கடன் வாங்கி, தவணை கட்டத் தவறினால், அதனை நாளிதழ்களில் அறிவித்து, அந்தச் சொத்தை ஏலம் விடுவார்கள்.

இதே நடைமுறையை இந்து நிறுவனத்திற்கான திவால் நடைமுறையிலும் பின்பற்றினால், பிற பிணைய சொத்துகளை தனித்தனியாக ஏலம் விடாமல், வங்கிகள் கொடுக்கும் வட்டி மற்றும் கடனுக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படாது. ஆனால், அந்த வழியை ஏன் எடுக்கவில்லை என்பதை வங்கிகளே தெளிவு படுத்திக்கொள்ள வேண்டும்.

இந்து புராஜெக்ட்ஸ் கடன்கள் குறித்து வங்கி மற்றும் கடன் (கோடிகளில்) விவரங்கள்,

  1. எஸ்பிஐ ரூ.996.62 கோடி
  2. ஐடிபிஐ ரூ. 803.10 கோடி
  3. எடெல்வீஸ் சொத்து புனரமைப்பு ரூ.451.46 கோடி
  4. பேங்க் ஆஃப் இந்தியா ரூ.339.91 கோடி
  5. சிண்டிகேட் வங்கி ரூ.217.18 கோடி
  6. பஞ்சாப் நேஷனல் வங்கி ரூ.223.33 கோடி
  7. கனரா வங்கி ரூ.196.70 கோடி
  8. இந்தியன் ஓவர்சீஸ் வங்கி ரூ.243.87 கோடி
  9. யூகோ வங்கி ரூ.193.77 கோடி
  10. சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா ரூ.125.32 கோடி
  11. ஆந்திரா வங்கி ரூ.151.65 கோடி
  12. REI ரூ 246.98 கோடி

இதுவரை மொத்தம் ரூ.4189.95 கோடி கடன் உள்ளது. செயல்பாட்டு செலவுகள் ரூ. 291.34 கோடி ஆகும்.

இதுவரை படிங்க:லாலு பிரசாத் மீதான நில மோசடி வழக்கு - 16 இடங்களில் சிபிஐ ரெய்டு

Last Updated : Aug 24, 2022, 3:27 PM IST

ABOUT THE AUTHOR

...view details