காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி மத்திய அரசை ட்விட்டரில் விமர்சித்துள்ளார். நாட்டின் பொருளாதார சரிவை வெளிப்படுத்தும் புள்ளிவிவரத்தை தனது ட்விட்டரில் பகிர்ந்துள்ள ராகுல் காந்தி, "கோவிட்-19 பாதிப்புக்கு முன்னர் இந்தியாவின் நடுத்தர வர்க்கத்தினர் 9.9 கோடியாக இருந்தனர். தற்போது அது 6.6 கோடியாக குறைந்துள்ளது.
கடந்த 10 ஆண்டுகளில் மட்டும் சுமார் 5.7 கோடி பேர் நடுத்தர வர்க்கத்தினர் என்ற அந்தஸ்திலிருந்து பின்தங்கிய வர்க்கத்தினர் எனச் சரிவைக் கண்டுள்ளனர். வேலையின்மை, விலைவாசி ஆகியவற்றையும், தனது நண்பர்களின் வருமானத்தையும் அதிகரித்ததுதான் இந்த அரசு செய்த சாதனை" எனச் சாடியுள்ளார்.