திருவனந்தபுரம்: விமானத்தில் வந்து கொள்ளை அடித்துச் செல்வதை வாழக்கமாக கொண்டு இருந்த ஹைகிளாஸ் திருடனை கேரள போலீசார் கையும் களவுமாக கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தெலங்கானா மாநிலம் கம்மம் மாவட்டத்தை சேர்ந்தவர் சம்பதி உமா பிரசாத். 23 வயதான உமா பிரசாத் தன் பதின்ம பருவ வயது முதலே எவரஸ்ட் மலையேற்றத்தில் அதீத ஆர்வம் கொண்டவராக காணப்படுகிறார். மலையேற்று வீரராக மாற வேண்டிய உமா பிரசாத்தின் வாழ்க்கை தடம்மாறி கொள்ளையராக மாறியது ஆதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கம்மம் மாவட்டத்தை சேர்ந்த உமா பிரசாத், விமானம் மூலம் கேரளவுக்கு சென்று அங்கிருந்து பல்வேறு பகுதிகளில் கொள்ளையடிப்பதை வழக்கமாக கொண்டு இருந்து உள்ளார். ஹைகிளாஸ் திருடன் போல் தன்னை காட்டிக் கொண்ட உமா பிரசாத், திருவனந்தபுரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள வீடு உள்ளிட்ட இடங்களை நோட்டமிட்டு கொள்ளை அடிப்பதை வழக்கமாக கொண்டு இருந்து உள்ளார்.
மேலும் கொள்ளையடித்த கையோடு லாட்ஜில் அறை எடுத்து தங்கும் உமா பிரசாத், பின்னர் விமானம் மூலம் தன் சொந்த ஊருக்கு செல்வதை வழக்கமாக கொண்டு இருந்து உள்ளார். பல்வேறு இடங்களில் கைவரிசை காட்டிய உமா பிரசாத்தை பிடிக்க முடியாமல் போலீசார் திணறி வந்து உள்ளனர்.