கர்நாடக மாநிலம் தாவனகெர் நகரத்தில் உள்ள தோலாஹனசே என்ற கிராமம் ஒரு காலத்தில் பருத்தி ஆலைகளுக்குப் புகழ்பெற்றது. இந்தக் கிராமத்திலுள்ள ஒவ்வொரு வீட்டிலும் இரண்டு அல்லது நான்கு நபர்கள் நாட்டிற்காகச் சேவையாற்றிவருகிறார்கள்.
வீரர்களின் கிராமம்
இந்தக் கிராமம், 'வீரர்களின் கிராமம்' என்று அழைக்கப்படுகிறது. இந்தக் கிராமத்தில் நூற்றுக்கணக்கான இளைஞர்கள் இந்திய ராணுவம், கடற்படை, விமானப்படை, துணை ராணுவப் படைகளுக்குச் சேவை செய்கின்றனர்.
இந்தக் கிராமத்தின் மக்கள்தொகை சுமார் நான்காயிரம் ஆகும். கிராமவாசிகளில் கிட்டத்தட்ட பாதி பேர் வாழ்வாதாரத்திற்காக கிராமத்திற்கு வெளியே வசிக்கின்றனர்.
கிராமத்தின் சுவாரஸ்ய கதை
இந்தக் கிராமத்தில் ஏராளமான வீரர்களுக்குப் பின்னால் ஒரு சுவாரஸ்யமான கதை உள்ளது. 1994இல் இந்தக் கிராமத்தைச் சேர்ந்த நான்கு இளைஞர்கள் இந்திய ராணுவத்தில் சேர்ந்தனர். அவர்களால் ஊக்கப்படுத்தப்பட்ட 240-க்கும் மேற்பட்ட கிராம இளைஞர்கள், நாட்டிற்குச் சேவை செய்யும் பாதுகாப்புப் படையின் பல்வேறு பிரிவுகளில் சேர்ந்தனர்.